வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (19:12 IST)

ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி : நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் ராம்குமாரை வருகிற 17ஆம் தேதி, நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஏற்கனவே போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின், அவரை  நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திற்கு அழைத்த சென்ற போலீசார், அவர் எப்படி அந்த கொலையை செய்தார் என்று நடித்து காட்டச் சொல்லி வீடியோ எடுத்தனர். 
 
அதன்பின், சமீபத்தில் சுவாதியின் நண்பர் என்று கூறப்படும் பிலால் மாலிக் உட்பட, சுவாதியின் தோழிகள் 5 பேரிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலமும் பெறப்பட்டது.
 
இந்நிலையில், ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்காக, அனுமதி கேட்டு போலீசார், எழும்பூர் நிதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இதை விசாரித்த நீதிபதி, வருகிற 17ஆம் தேதி ராம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அங்கு நீதிபதி முன்னிலையில் அவர் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.