ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (20:57 IST)

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை ! மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல்  லேசான மழை பெய்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான விளமல், புலிவலம், அம்மையப்பன், கமலாபுரம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகிறது.
 
மேலும், நாகை மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளான மயிலாடுதுறை, மணமங்கலம், குற்றாலம் ஆகிய இடங்களிலும் லேசாக மழை பெய்து பூமியைக் குளிர்வித்துள்ளது.
 
அதனால், வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிடுமோ என நினைத்திருந்த மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.