1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (07:11 IST)

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 காற்றின் வேகத் திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடலூர், நாகை, திருவாரூர், நெல்லை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி  ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே டிசம்பர் 31ஆம் தேதி வரை சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva