தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இளையராஜாவின் சிம்ஃபொனி இசைக் கச்சேரி எப்போது?... வெளியான தகவல்!
- தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி
- நாயை துன்புறுத்தவும் கூடாது.. நாய்க்கடி எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்: நீதிமன்றம்
- என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.
- தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, சென்னை உட்பட தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தெற்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையின் காரணமாக, ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
