1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (12:47 IST)

தமிழகத்தை சுற்றிதான் என் எண்ணங்கள் உள்ளது! – ராகுல்காந்தி ட்வீட்!

நேற்று சென்னையில் எதிர்பாராத விதமாக கனமழை பெய்த நிலையில் ராகுல்காந்தி இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முதலாக பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் நீர் தேங்கியதால் சுரங்க பாதைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கனமழை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “தமிழ்நாட்டு மக்களை சுற்றியே எனது எண்ணங்கள் உள்ளது. கனமழையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்