1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (13:17 IST)

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துறுத்தினாரா விஜயகாந்த்.. ராதாரவி கூறிய உண்மை..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து மோதல்களில் ஜெயலலிதாவை பார்த்து விஜயகாந்த் நாக்கை துறுத்தியதாக தான்  கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.

ஆனால் இது குறித்து விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். விஜயகாந்த் சட்டசபையில் நாக்கை துறுத்திய சம்பவம் நடந்த அன்று இரவே நான் விஜயகாந்த் இல்லத்தில் சென்று அவரை சந்தித்தேன்.

அப்போது நான் அவரிடம் இதுகுறித்து கேட்ட போது ஜெயலலிதா மீது தனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு என்றும், அவரை பார்த்து என்னால் நான் நாக்கை துறுத்தியதாக என்றும் கூறினார். மேலும் அமைச்சர்களில் ஒருவர் தான் தன்னுடைய குடும்பத்தை பற்றிய தரக்குறைவாக பேசினார் என்றும் அதனால் தான் அவரை பார்த்து தான் நான் நாக்கை துறுத்தினேன் என்றும் கூறினார்.

விஜயகாந்த் எப்போதும் உண்மையை தான் சொல்வார், பொய் சொல்ல மாட்டார், எனவே அவர் சொன்ன இந்த கருத்து தான் உண்மையானது’ என்று ராதாரவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Edited by Mahendran