வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (13:17 IST)

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; 3 குற்றவாளிக்கு மரண தண்டனை

court
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்த நிலையில் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த 2020 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது .
 
இவ்வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran