1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 23 டிசம்பர் 2019 (21:24 IST)

மு. க. ஸ்டாலின் மக்களை தூண்டிவிடுகிறார் - அமைச்சர் விமர்சனம் !

மத்திய பாஜக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு எங்கிலும் பலத்த போராட்டங்கள் எழுந்தன. அப்போது பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன.
இந்நிலையில்,  தமிழக எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று பேரணி நடத்தப்பட்டது.
 
இந்நிலையில்,  குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதுபோல் மக்களை தூண்டிவிடுவதாக ஸ்டாலின் மீது  அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள்  சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்குப் பயந்து கொண்டுதான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாகவும் விமர்சனம் செய்தார்.