வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (15:27 IST)

கடை கடையாக வசூலிச்சு கட்சி விழா... யாரை சீண்டுகிறார் பிரேமலதா!

சாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 
 
பிரேமலதா விஜயகாந்த் குட்ட குட்ட குனிய மாட்டோம் என பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது சாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 
 
அதோடு, கடை கடையாக வசூல் செய்து கட்சி விழா நடத்துகிறார்கள் என தெரிவித்தார். மேலும், பேச்சில் பிற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருப்பவர்கள் பலரும், கேப்டனின் பாலிசியைப் பின்பற்றியவர்கள் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.