வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (12:55 IST)

டயருக்கு ஃபேமஸ் தமிழகம்தான்! – எடப்பாடியார் பெருமிதம்!

காஞ்சிபுரத்தில் சியட் டயர் நிறுவன தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் தொழிற்சாலை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கு ஏற்றி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.

பிறகு பேசிய அவர் டயர் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் டயர் உற்பத்தியில் 40% தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது என்றும், சைக்கிள் டயர் முதல் போர் விமானங்களின் டயர் வரையிலும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.