1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:26 IST)

ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுகிறாரா பிரேமலதா விஜயகாந்த்?

தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக தரப்பில் பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தனது சமீபத்திய பேட்டியில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி இது. எந்த கட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. 

இந்நிலையில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக தேமுதிக வின் ஆலோசனைக் கூட்டம் தா.பழூரில் நடந்த போது மாநில கலை இலக்கிய அணி அமைப்பாளர் விஜயகண்ணன் பேசியுள்ளார். ஜெயங்கொண்டம் தொகுதி இப்போது ஆளும் கட்சியான அதிமுகவின் வசம் உள்ளது.