தொடர்புடைய செய்திகள்
- ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
- அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வை எதிர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
- ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?
- மனம் திறக்கப்போகும் செங்கோட்டையன்.. இன்றே வாய் திறக்கும் எடப்பாடியார்! - அதிமுகவில் காத்திருக்கும் அதிர்ச்சி!
- தி.மு.க. ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி தான் சொல்லாத விஷயங்கள் பரப்பப்படுவதாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாகச் செய்திகள் பரவுகின்றன. அது தவறானது, அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது" என்று அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. இடையே ஏற்பட்ட கூட்டணி முறிந்துவிட்டதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக ஒரு சில செய்திகள் பரவின. அது தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிரேமலதா விஜயகாந்த் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
