1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:58 IST)

பயிற்சி பெண் மருத்துவர் காய்ச்சலால் உயிரிழப்பு.. திருவாரூரில் பரபரப்பு..!

கேரளாவில் இருந்து பயிற்சி பெறுவதற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த இளம் பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவைச் சேர்ந்த சிந்து என்ற பெண் மருத்துவர் பயிற்சிக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தார். இவர் கடந்த நேற்று காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிர் இழந்தார்.  
 
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பயிற்சிக்கு வந்த சிந்து காய்ச்சல் காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்த பயிற்சி மாணவி மரணம் சக மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva