1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (13:02 IST)

பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வருக்கு சம்மன்: அதிரடி முடிவெடுத்த காவல்துறை!

பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வருக்கு சம்மன்: அதிரடி முடிவெடுத்த காவல்துறை!
பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன் அந்த பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்கு செய்யப்பட்டது.இதனை அடுத்து அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் 
 
இந்த நிலையில் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களையும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பள்ளி முதல்வருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பாலியல் புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டதை அடுத்து பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளதாகவும் பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது,.