வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 மே 2021 (21:02 IST)

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்: 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் தொந்தரவு

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்:
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து காவல்துறையினர் இன்று அவரை சுற்றிவளைத்தனர். இந்த நிலையில் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிகிறது 
 
குறிப்பாக பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்து உள்ளதாக வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது
 
கடந்த 5 ஆண்டுகளாக 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளை அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார். மேலும் விசாரணைக்கு முன்பாகவே தனது செல்போனில் இருந்த மாணவிகளின் புகைப்படங்களையும் அவர் டெலிட் செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது