வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (16:59 IST)

முதலாவதாக சிக்கிய மய்யம்; மய்யத்தார் தேர்தல் பரிசு பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசு பொருட்கள் கொண்டு சென்ற மநீம வாகனம் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பிரதான சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பலர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் வழியாக சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தேர்தல் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது, அதை தொடர்ந்து போலீஸார் அந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.