வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (15:58 IST)

பெண்ணை லத்தியால் அடித்த போலீஸ் ! கதறி அழும் கணவர் ...பரவலாகும் போட்டோ

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெள்ளூர். இவர் தனது  மனைவி மாரிக்கண்ணு மற்றும் கண்ணன் ஆகிய மூவருமாக இரு சக்கரவாகனத்தில் துரத்தியேந்தல் என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சாலையில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 
இந்நிலையில் இவர்கள் மூவரும் ஒரே வாகனத்தில் வருவதைப் பார்த்த போலீஸார் வாகனத்தை நிறுத்துமாறு கூறினர். பின்னர் போலீஸார் லத்தியால் மாரிக்கண்ணுவை அடித்துள்ளனர்.
 
இந்த தாக்குதலில் நிலை தடுமாறிய  மாரிககண்ணு மற்றும் வாகனத்திலுருந்து இருவரும் சாலையில் கீழே விழுந்தார். இதனைப் பார்த்த மக்கள் பதறியடித்துப்போய் மாரிக்கண்ணுவை தூக்க சென்றனர். 
 
இதனால் ஆவேசம் அடைந்த வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கை மனித உரிமைகள் ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகந்தாஸ் வழக்கத் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் இந்த சம்பவம் குறித்து ராமராதபுரம் எஸ் பி ஓம்பிரகாஷ் மற்றும் மீனா இருவரும் இரண்டு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். 
 
இந்த தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.