வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (20:41 IST)

தமிழகத்தில் வன்முறையைத் தூண்ட முயல்கிறது பாமக - திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழகத்தை வன்முறைக் காடாக்க பாமக முயற்சி மேற்கொள்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது பொன்பரப்பி என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது. இதுசம்பந்தமாக சில நாட்களுக்கு முன்னர் பாமக சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சில விளக்கங்களை முன்வைத்தனர்.
 
இந்நிலையில் பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறையை தொடர்பாக திருமாவளவன் அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில், பொன்பரப்பி வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியர் எஸ்றா சற்குணம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் ஆகியோருக்கு எதிராக பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
 
இம்மாதிரி வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயல்படும் ராமதாஸின் வெறுப்பு அரசிலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மேலும் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் மிகப்பெரிய வன்முறையைத் தூண்ட ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பது  அவரது அறிக்கையிலேயே தெரிக்கிறது. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும்  என்று இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.