1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 ஏப்ரல் 2021 (13:52 IST)

பழவேற்காடு அருகே படகில் சென்று வாக்களித்த இரு ஊர் மக்கள்!

பழவேற்காடு அருகே உள்ள இரண்டு கிராம மக்கள் படகில் சென்று வாக்களித்துள்ளனர்.

பழவேற்காடு அருகில் அமைந்துள்ளன தாங்கல்பெரும்புலம், இடையன்குளம்  ஆகிய இரு கிராமங்களும். இந்த இரு ஊர்களிலும் சேர்த்து மொத்தம் 250 கிராமங்கள் உள்ளன. இவர்களுக்கான வாக்குச்சாவடி மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோரைக்குப்பம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தரை வழியாக வாக்குச்சாவடிக்கு செல்ல 7 கி மீ தூரம் பயணம் செய்யவேண்டும். ஆனால் படகில் சென்றால் குறைந்த தூரம் என்பதால் படகில் சென்று வாக்களித்துள்ளனர்.