தொடர்புடைய செய்திகள்
- பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை! – போலீசார் துப்பாக்கிச்சூடு!
- விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்!
- முதல் முறையாக பா ரஞ்சித்துடன் இணையும் ஜி வி பிரகாஷ்…. வைரலாகும் புகைப்படம்
- பிரதாப் போத்தன்: இறக்கும் முன்பு மரணம் குறித்துப் பேசிவந்த 80களின் மென் நாயகன்
- விக்ரம்- பா ரஞ்சித் படத்தின் பூஜை எப்போது? வெளியான தகவல்!
பள்ளி மாணவி மரணம்: இயக்குனர் பா ரஞ்சித் ஆவேச டுவிட்
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் பள்ளி மாணவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை உடனே கண்டுபிடித்து தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசே குற்றவாளிகளை கைது செய்! கள்ளக்குறிச்சி, சக்தி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு ஆய்வு அறிக்கை தெரிவித்தும் ஏன் பள்ளியின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?
அடுத்த கட்டுரையில்
