வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூன் 2018 (10:16 IST)

ஊட்டி பேருந்து விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

நீலகரி மாவட்டம் ஊட்டி அருகே அரசு பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 7 லிருந்து 9 ஆக அதிகரித்துள்ளது.
ஊட்டி அருகே மந்தடா என்ற கிராமத்திற்கு 34 பயணிகளுடன் அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள அபாயகரமான சாலையில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 220 அடி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.