வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (13:53 IST)

ஓல்டு மேன் செய்த பாலியல் லீலை ...அசத்தலாக தீர்ப்பு சொன்ன ஜட்ஜ்

கடலூர் மாவட்டம் பொன்னாடம் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (63) . பேரன் பேத்தி எடுத்த வயதில் உள்ள அவர் தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயதுள்ள சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டிருக்கிறார்.
சென்ற வருடம் நடந்தது இந்த நிகழ்வு. இந்நிலையில் நீதிபதி டி.லிங்கேஷ்வரன் இந்த வழ்க்கை விசாரித்து வந்தார்.
 
தீவிர விசாரணைக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.அப்போது குற்றவளி நீதிமன்றக் கூண்டிலேயே மயங்கி விழுந்தார். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதனால் நீதிபதி உத்தவுப்படி சங்கரநாராயணன் 108 மருத்துவ ஊர்தியில் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
இந்நிலையில் நேற்று கோர்டில்  ஆஜராக வேண்டிய  சங்கரநாராயணன் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு வரவில்லை எனவே நேற்று மாலை மருத்துவமனைக்கு சென்ற நீதிபதி, ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சங்கரநாரயணன் அருகில் சென்று தீர்ப்பை வாசித்தார்.
 
அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தணடனை அளித்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக சட்டெனக் கூறிவிட்டு நீதிபதி கிளம்பினார்.
 
இச்சம்பவத்தால்  மருத்துவமனையில் சிறிது நேரம் பரப்ரப்பு ஏற்பட்டது.