சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 9 டிசம்பர் 2023 (07:22 IST)

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு!

NIA1
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை அருகே குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு செய்து வருகிறது.  கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக இந்த தடயவியல் ஆய்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது.  

என்.ஐ.ஏ விசாரணையில் இந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva