1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New Rupees came to chennai: Modi fights corruption

புதிய ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன: வங்கி அதிகாரி தகவல்!

புதிய ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன: வங்கி அதிகாரி தகவல்!

மோடி
500, 1000 ரூபய் நோட்டுகள் இன்று முதல் வாபஸ் வாங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு தெரிவித்தார். இதனை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அவர் கூறினார்.


 
 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட் மற்றும் 2000 ரூபாய் நோட் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது.
 
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேடியளித்த சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அதிகாரி கூறுகையில், ரிசர்வ் வங்கி அனுப்பிய புதிய ரூபாய் நேட்டுகள் சென்னை வந்தன எனவும், நாளை முதல் தங்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து இந்த புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறினார்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
பாரிஸில் இருந்து வாழ்த்திய நடிகர் - பதிலளித்த பிரதமர் மோடி!