தொடர்புடைய செய்திகள்
- பொறியியல் கலந்தாய்வில் 24,177 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை; 2-வது சுற்று கலந்தாய்வு எப்போது?
- 1100 ஆண்டுகள் பழமையான ஒன்பது கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன!
- மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல் - சிபிஎம்.மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,சிபிஐ.மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர்கள் கைது...
- பள்ளி வகுப்பறையில் அமர்ந்து மது அருந்திய மாணவர்கள்.. கோவை அரசு பள்ளியில் அதிர்ச்சி..!
- பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம் மருத்துவ மனையில் அனுமதி!
சக மாணவரை அரிவாளால் வெட்டிய 9ம் வகுப்பு மாணவர்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!
நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் 9ம் வகுப்பு மாணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரிவாளால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இடையே தண்ணீரை சிந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை 9ம் வகுப்பு மாணவர் வெட்டியதாகவும், முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அரிவாளால் தாக்கி விட்டு அந்த மாணவர் தப்பியோடியதாக நாங்குநேரி ஏ.எஸ்.பி. டாக்டர் பிரசன்ன குமார் தகவல் தெரிவித்துள்ளார்.தற்போது அரிவாளால் வெட்டிய மாணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை வலைவீசி தேடிய வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
நெல்லை மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு படி மேலே போய் அரிவாளால் சக மாணவரை விட்டும் அளவுக்கு விரோதம் வளர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
Edited by Mahendran
