வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (12:15 IST)

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு பூக்கடையில் வாலிபர் வெட்டிக் கொலை

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு பூக்கடையில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
ஒட்டன்சத்திரம் சிக்கந்தர்நகரை சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன்கள் கார்த்திக், ஜெயக்குமார் (வயது 19). இதில் கார்த்திக், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு பூக்கடை வைத்துள்ளார். இந்த பூக்கடைக்கு அவரது தம்பி ஜெயக்குமார் தினமும் வந்து அண்ணணுக்கு உதவி செய்வார். 
 
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வழக்கம் போல் ஜெயக்குமார், பூக்கடைக்கு வந்தார். அப்போது  பூக்கடைக்கு  மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அரிவாள்களுடன் இறங்கினர்.
 
3 பேரும், ஜெயக்குமாரை சூழ்ந்து சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டனர். இதனை பார்த்து பயந்து போன பொதுமக்கள் யாரும் ஜெயக்குமுரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதை தொடந்து மோட்டார்சைக்கிளில் 3 பேரும் தப்பிவிட்டனர்.
 
இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். . இதுபற்றி தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
 
இதையடுத்து ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயக்குமாரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.