1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2023 (18:48 IST)

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்

viyalakshmi -seeman
சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில், நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி மகளிரணியினர் புகார் அளித்துள்ளனர்.

சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தி, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவுசெய்தனர். அதன்படி, நேற்று,  திருவள்ளூர் மாவட்ட மகிளா  நீதிமன்றத்தில்  நடிகை விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவர் நீதிபதி பவித்ரா முன்பு  ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய லட்சுமி அளித்த புகாரில் வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக  சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில், நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி மகளிரணியினர் புகார் அளித்துள்ளனர்.

அந்த மனுவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.