1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (12:45 IST)

அகதிகள் முகாமில் இருந்து முருகனை விடுவிக்க கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தனது கணவர் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மேற்கண்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து முருகனை உச்சநீதிமன்றம் விடுவித்தது அவர் திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் நளினியுடன் சேர்த்து வைக்கப்படுவாரா? என்பது இந்த வழக்கின் முடிவில் தான் தெரிய வரும்.
 
Edited by Mahendran