1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 ஜூன் 2021 (14:02 IST)

வண்டலூர் சிங்கங்களுக்கு கொரோனா: நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்!

வண்டலூர் சிங்கங்களுக்கு கொரோனா: நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்!
வண்டலூரில் உள்ள ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தகவல் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் நிலா என்ற 9 வயது சிங்கம் கொரோனாவால்  து உயிரிழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட சிங்கங்களை நேற்று வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர். இதனை அடுத்து சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வண்டலூர் பூங்காவுக்கு நேரில் சென்றார். அங்கு வனத்துறை மற்றும் பூங்கா நிர்வாகிகளிடம் சிங்கங்களுக்கு கொரோனா எப்படி வந்தது என்பது குறித்தும் கேட்டறிந்தார் 
 
அதன்பின்னர் பேட்டரி கார் மூலம் அவர் வண்டலூர் பூங்காவில் உள்ள கொரோனா பாதித்த சிங்கங்களை பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல்வருடன் அமைச்சர் தாமோதரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் வருகையை அடுத்து வண்டலூர் பூங்காவில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.