முறைகேடு செய்வதில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ‘இரட்டை குழல் துப்பாக்கி’: மு.க.ஸ்டாலின்

வெள்ளி, 10 நவம்பர் 2017 (14:26 IST)
நேற்று தேனியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 'நானும் ஓபிஎஸ் அவர்களும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு அரசை வழிநடத்தி வருகிறோம் என்று  கூறினார்.



 
 
முதல்வரின் இந்த பேச்சு குறித்து கருத்து கூறிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவது உண்மைதான். ஆனால் அவர்கள் இருவரும் முறைகேடு செய்வதில் ‘இரட்டை குழல் துப்பாக்கி’ போல் செயல்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
 
மேலும் அரசு செலவில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பெரும்பாலும் அரசியல் மட்டுமே பேசப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மழையைக் காரணம் காட்டி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக தேனி பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வரவழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
 

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments