1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:43 IST)

குழந்தைக்கு அரசரின் பெயரை சூட்டிய முதல்வர்! – திருவேற்காட்டில் ருசிகர சம்பவம்!

திருவேற்காட்டில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு குழந்தை ஒன்றிற்கு பெயர் சூட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு மற்றும் சரிசெய்யும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக இன்று திருவேற்காட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அங்கு பிறந்த குழந்தை ஒன்றிற்கு பெயர் வைக்க பெற்றோர்கள் கேட்டபோது அந்த குழந்தை “சோழன்” என முதல்வர் பெயர் வைத்துள்ளார்.