1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (11:41 IST)

பொன்முடி வகித்த உயர்கல்வித்துறை பொறுப்பு யாருக்கு? பரபரப்பு தகவல்..!

உயர்கல்வித்துறை அமைச்சராக பணிபுரிந்த பொன்முடி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிட்டார். 
 
இதனை அடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 திமுக வட்டாரங்களில் இது குறித்து கூறப்படும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நிமிடங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பாளர் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran