வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (14:58 IST)

ஆஃபீஸ் பக்கம் தல வச்சி கூட படுத்துறாதீங்க... பாஜக கெடுபிடி!!

கொரோனா பீதியால் தொண்டர்கள் நிர்வாகிகள் யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என தமிழக பாஜக பொது செயலாளர் தெரிவித்துள்ளார். 
 
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் இதுவரை மரணித்துள்ளனர். 
 
பள்ளி, கல்லூரி, மால் என அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதி அவரை திறக்கப்பட கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழக பாஜக பொது செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் பாஜக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்... 
 
கொரோனா வைரஸ் பரவி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை மாநில தலைமை அலுவலகத்தில் தலைவர்கள் சந்திப்புகள் நடைபெறாது. எனவே, தொண்டர்கள் பாஜக ஆபீசுக்கு வருவதையும், தலைவர்களின் வீட்டிற்கு செல்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.