திருமணத்திற்கு இ-பாஸ் இந்த மாவட்டங்களுங்கு மட்டும்..? – கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

ஞாயிறு, 20 ஜூன் 2021 (15:20 IST)
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணத்திற்கு இ-பாஸ் பெறுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் இன்றுடன் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை ஜூன் 28 வரை நீடித்துள்ள தமிழக அரசு அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி திருமணத்திற்கு இ-பாஸ் பெறுதல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் திருமணத்திற்காக அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் ஆட்சியரிடம் இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

15 வருடங்களுக்கு பின் வீட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!.. பின்னணி என்ன?..

இது விளம்பர அரசு அல்ல.. செய்து காட்டும் அரசு.. மஹிந்திரா நிறுவனத்தின் புதிய புரோஜக்ட்.. 1500 பேருக்கு வேலை கிடைக்கும்...!

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு ஏமாற்றும் அரசு அல்ல தவெக அரசு.. உண்மையான தொழிற்சாலைகள் அமைவதை வைத்தே மதிப்பீடு.. அமைச்சர் கீர்த்தனா

விஜய்யை கேலி செய்யாத ஊடகம் மிக குறைவு.. விஜய்யை இழிவுபடுத்தாத பத்திரிகையாளர்களே இல்லை.. இந்த லட்சணத்தில் எப்படி பேட்டி கொடுப்பார்?

51 லட்சம் செலவு செய்து சுரங்கப்பாதை அமைத்தார்களா திமுக அரசு ? வெறும் குழியை தோண்டிவிட்டு பணம் ஸ்வாகாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments