1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (15:35 IST)

மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டு கொண்டவர் வலிப்பு வந்து பலி.. போலீசார் வழக்குப்பதிவு..!

Injection
சின்னசேலம் அருகே மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டுக் கொண்டவர் வலிப்பு வந்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சின்ன சேலம் அருகே கூலி தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லை என்று மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டுக் கொண்டதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் ஊசி போட்டுக் கொண்ட சில நிமிடங்களில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இந்த நிலையில் கூலித்தொழிலாளிக்கு ஊசி போட்ட தனியார் மெடிக்கல் ஷாப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தியதை அடுத்து மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva