1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (10:02 IST)

சிறுமிகள் ஆபாசப் புகைப்படம் பதிவேற்றிய நபர் - போக்ஸோ சட்டத்தில் கைது !

மதுரையில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு தமிழக காவல்துறை சார்பில் வெளியான அறிக்கையில் சிறுமிகள் ஆபாசப்படத்தை இணையத்தில் பார்ப்பவர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவ்ர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி அதிரடியாக சில கைதுகளும் நடந்தன.

அதையடுத்து இப்போது சிறுமிகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதாக மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவருக்கு வயது 40. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அளித்த தகவலின் படி குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ கைது போலிஸார் செய்துள்ளனர்.