தொடர்புடைய செய்திகள்
- பான் - ஆதார் இணைப்புக்கு கடைசி வாய்ப்பு.. மத்திய அரசு எச்சரிக்கை..
- டாடா படத்துக்குக் கிடைத்த வரவேற்பு… கவினுக்கு வாய்ப்புக் கொடுக்கும் கமல்ஹாசன்!
- தமிழகத்தின் 4 நகரங்களில் மாசு அதிகம்: மத்திய அரசு தகவல்..!
- அதானி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்..!
- இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புக்ஸ் கடையை திறந்துவைக்கும் கமல்ஹாசன்!
மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்: கமல்ஹாசன்
மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் அலுவலங்களில் ஐடி ரெய்டு நடத்தியுள்ளனர். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஐ, வருமான வரி, அமலாக்கத் துறைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல"
தவறுகளை சுட்டிக் காட்டுவதும், விமர்சிப்பதும் ஊடகங்களின் பணி. அவற்றை ஏற்று, திருத்திக் கொள்வதுதான் மத்திய அரசுக்கு அழகு. அதைவிடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, விமர்சிப்போரின் குரல்வளையை நெறிக்க முற்படுவது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது" - மக்கள் நீதி மய்யம்
எதிர்க்கட்சிகள், ஊடகங்களைப் பழிவாங்கும் சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த சோதனைக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்
Edited by Mahendran
