தொடர்புடைய செய்திகள்
- ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள்: 2வது புயலின் பெயர் அறிவிப்பு!
- கியார் புயல்: கரை திரும்பாத 120 தமிழக மீனவர்கள் - கலக்கத்தில் உறவினர்கள்
- முருகனின் சரவணபவ என்ற மஹாமந்திரத்தின் பொருள் என்ன....?
- புயல் வரும் முன்னே காப்பாற்றப்படுவார்களா மீனவர்கள்? – குமரி மக்கள் வேதனை!
- காஷ்மீர் பற்றி பேசினால் மலேசிய பிரதமருக்கு உள்நாட்டில் ஆதாயம் கிடைக்குமா?
”மஹா”வால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை..
அரபிக்கடலில் உருவாகியுள்ள மஹா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் வலுவான புயலாக மாறக்கூடும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே “க்யார்” என்னும் புயல் உருவாகியுள்ள நிலையில், தற்போது கேரளாவிலிருந்து 300 கிமி தொலைவில் உருவாகியுள்ள ”மஹா” புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ”மஹா” புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு வருமா என பலரும் அச்சம் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது ”மஹா” புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது என தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
