தொடர்புடைய செய்திகள்
- நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: நீதிமன்றம் வலியுறுத்தல்..!
- ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1190 ஏக்கர் சொத்து மீட்பு: நீதிமன்றம் உத்தரவு..!
- நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? – இப்படி செய்தால் கிடைக்கும்
- நித்தியானந்தாவின் கைலாசா கற்பனை தேசம் - ஐ.நா அளித்த விளக்கம்
- 10 சதவீத இட ஒதுக்கீடு. திமுக சீராய்வு மனு தாக்கல்
மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தா.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவிக்கக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போதைய மதுரை ஆதினம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
