1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:26 IST)

10 ஆயிரம் முகாம்கள்; 20 லட்சம் தடுப்பூசிகள்! – தமிழக அரசின் பிரம்மாண்ட ப்ளான்!

தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்திருந்தாலும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாள்தோறும் அரசு தலைமை அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் வசதியையும் தமிழக அரசு அமல்படுத்தியது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த அரசு திட்டமிட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.