1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (15:13 IST)

காய்ச்சலால் சிறுமி பலி….அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் அப்துல் சதார். இவரது மகள் இமாம் உவைஸ்ஸிக்கு  கடந்த ஒரு வாரமாயக் காய்ச்சல் இருந்த நிலையில் அவருக்கு புனிதர் நீர் என்ற பெயரில் தண்ணீரைத் தெளித்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்  இருந்துள்ளனர்.

சிறுமிக்கு காய்ச்சல் அதிகரிக்கவே, உறவினர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.