1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (13:33 IST)

வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை ஏன் உண்மையை மறைக்கிறார்? கே.எஸ் அழகிரி கேள்வி

Azhagiri
வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை ஏன் உண்மையை மறைக்கிறார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அழகிரி வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை ஏன் உண்மையை மறைக்கிறார் என்றும் அண்ணாமலை எந்த வாட்ச் கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன் என்றும் அவர் அந்த வாட்சை எங்கே வாங்கினால் எங்களுக்கு என்ன என்றும் ஆனால் இந்த விஷயத்தில் அவர் ஏன் உண்மையை மறைக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ராகுல் காந்தியின் நடைபயணம் வேறு என்றும், அண்ணாமலை நடைப்பயணம் வேறு என்றும் அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் நடைபயணம் எந்த பயனையும் தராது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்திக்க இருப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Edited by Mahendran