1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (17:15 IST)

கனிமொழியை திடீரென சந்தித்த தமிழிசை செளந்திரராஜன்.. என்ன காரணம்?

திமுக எம்பி கனிமொழியை தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அரசியல் உலகில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது 
 
திமுக எம்பி  கனிமொழியின் கணவர் அரவிந்தன் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் மருத்துவமனையில் உடல் நல கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் தற்போது அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் அரவிந்தனின் உடல்நிலை குறித்து விசாரிக்க தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்றார். அவருடன் அவர்கள் கணவர் டாக்டர் சௌந்தரராஜன் அவர்களும் சென்றார். அரவிந்தன் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்ட  தமிழிசை சில ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. மேலும் கனிமொழிக்கு அவர் ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரும் தூத்துக்குடி தொகுதியில் எதிரெதிராக போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran