1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:33 IST)

உதகையில் நாளை நடைபெற இருந்த ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து; என்ன காரணம்?

jp nadda
ஊட்டியில் நாளை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்து கொள்ள இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பாஜக சார்பில் சில நகரங்களில் ரோடு ஷோ நடத்தப்பட்டு வருகிறது என்பதும் சில இடங்களில் ரோடு ஷோ செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் காரைக்குடியில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்த இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது பாஜக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக நாளை ஊட்டியில் நடைபெற இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இந்த ரோடு ஷோவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு மற்றொரு முக்கிய பணி இருப்பதாகவும் அதனால் இந்த ரோடு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran