1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (17:32 IST)

ஜெயலலிதா மரணம்: அறிக்கை நாளை தாக்கல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரண அறிக்கையை நாளை காலை ஆறுமுகசாமி தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்,  விசாரணை குழு அமைக்கப்பட்டு, அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்பின், ஜெயலலிதாவின், உறவினர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 5 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் இந்த அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது., 600 பக்கங்கள் கொண்ட  இறுதி அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு ஆறுமுகசாமி தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலிடம் தாக்கல் செய்கிறார்.

இதற்கு முன் 14 முறை கால அவகாசம் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.