1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 மார்ச் 2018 (16:54 IST)

அன்வர்ராஜா எம்பியின் மகன் திருமணத்தை நிறுத்திய பெண்ணின் போராட்டம்

அதிமுக எம்பி அன்வர்ராஜாவின் மகன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டை கூறிய இளம்பெண், அவரது மகனுக்கு இன்று நடைபெறவிருந்த திருமணத்தை  நிறுத்தியுள்ளார்.

அதிமுக எம்பி அன்வர்ராஜாவின் மகன் நாசர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் மூன்று மாதங்கள் வாழ்ந்ததாகவும், பின்னர் தன்னுடைய சேமிப்பான ரூ.50 லட்சம் மற்றும் ரூ.10லட்சம் மதிப்பிலான நகையை பெற்று கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் சென்னையை சேர்ந்த ரொபினா என்பவர் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்

இந்த நிலையில் இன்று காரைக்குடி பள்ளிவாசலில் அன்வர்ராஜா திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பள்ளிவாசல் முன் போராட்டம் நடத்திய ரொபினா, பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜமாத்தார் அன்வர்ராஜா மகனின் திருமணத்தை நிறுத்தியது மட்டுமின்றி காரைக்குடியில் உள்ள எந்த பள்ளிவாசலிலும் நாசர் அலிக்கு திருமணம் நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது