1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (13:54 IST)

பாரத அன்னையின் இதயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-ராகுல் காந்தி

rahul gandhi
மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினி பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் மர்ம நபரால் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிகிறது. வன்கொடுமை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக சாலையில் விடபட்ட அந்த சிறுமி உதவிக்கேட்டு உஜ்ஜயினி தெருக்களில் சென்றுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் சுமார் 8 கி.மீ உடலில் ரத்த காயங்களுடனும், அரை நிர்வாணமாகவும் நடந்து சென்றுள்ளார்.

இந்த கோர சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’மத்தியப் பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு நடந்த கொடூரமான குற்றம், பாரத அன்னையின் இதயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மைனர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிக எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசத்தில் தான் நடக்கிறது

இந்தக் குற்றங்களைச் செய்த தீயவர்கள்தான் குற்றவாளிகள். அதுமட்டுமின்றி, மகள்களை பாதுகாக்க முடியாத நிலையில் தான் பாஜக அரசு உள்ளது. நீதியும் இல்லை, சட்டம் ஒழுங்கும் இல்லை, உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''இன்று, மத்தியப் பிரதேசத்தின் மகள்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது தேர்தல் பேச்சுகளுக்கும், பொல்லாத வாக்குறுதிகளுக்கும், பொய்யான முழக்கங்களுக்கும் மத்தியில் நம் நாட்டு மகள்களின் அலறல்களை அடக்கி வைத்திருக்கிறார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.