1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (10:53 IST)

ஷூட்டிங் இல்லாம போர் அடிக்குதோ...? அடுத்தடுத்து மா.செ-க்களுடன் மீட்டிங் போடும் ரஜினி!

ரஜினிகாந்த் மீண்டும் தனது மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பிற்கு பின்னர் தான் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மாவட்ட செயலாளர்களுக்கு திருப்தியாக இருந்ததாகவும் ஆனால் தனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமே ஒரு விஷயத்தில் ஏமாற்றம் என்றும் கூறினார். 
 
ரஜினியின் ஏமாற்றம் என கடந்த ஒரு வாரமாக பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பை நிகழ்த்தயுள்ளார் ரஜினி. ஆம், நாளை காலை 8 மணிக்கு சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. 
 
அடுத்தடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதால், ரஜினி தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக கூறப்பட்டாலும், அவருக்கு ஷூட்டிங் இல்லாததால் போர் அடிக்கும் எனவே இப்படி மீட்டிங் நடத்தி வருகிறார் என சமூக வலைத்தளங்களில் கிண்டல் கேலியும் எழுந்து வருகிறது.