ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (18:18 IST)

ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.30 ஆயிரம் வட்டி: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி

arudhra
ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.30 ஆயிரம் வட்டி: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி
ஒரு லட்ச ரூபாய் கட்டினால் 30 ஆயிரம் வட்டி தருவதாக சென்னையைச் சேர்ந்த ஆரூத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி செய்துளதாக கூறப்படுகிறது
 
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தை இன்று திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் 
 
ரூபாய் ஒரு லட்சம் கட்டினால் மாதம் ரூபாய் 30,000 வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
 
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வருடத்திற்கு 12 சதவிகிதத்திற்கு மேல் வட்டி தருவதாக கூறும் எந்த நிறுவனமும் மோசடி நிறுவனமே என்பதை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்