தொடர்புடைய செய்திகள்
- ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் - சென்னை மெட்ரோ அறிவிப்பு
- சென்னையில் 'பார்முலா 4 கார் ரேஸிங்'- டிக்கெட்டுகளை வெளிட்ட அமைச்சர் உதயநிதி
- நாளை இந்த மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..
- தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
- ஆட்டோவில் வந்த ரூ.1 கோடி ஹவாலா பணம்.. டிரைவரின் சாமர்த்தியத்தால் சிக்கிய 3 நபர்கள்..!
சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!
கனமழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் மழையின் அளவிற்கு ஏற்ப ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளதை அடுத்தும், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ததை அடுத்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
